ஒடும் ரயிலில்18 கிலோ கஞ்சா பறிமுதல்; ரயில்வே போலீசார் விசாரனை:

by Editor / 11-11-2023 08:45:52am
ஒடும் ரயிலில்18 கிலோ கஞ்சா பறிமுதல்; ரயில்வே போலீசார் விசாரனை:

திருள்ளூர் -அரக்கோணம் இடையே ஒடும் ரயிலில் சோதனையிட்ட அரக்கோணம் ரயில்வே போலீசார் கேட்பாராற்று இருந்த பையிலிருந்து 18 கிலோ கஞ்சாவை கைப்பற்றி கடத்தியது யார்..? என அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே போலீசார் இன்று மதியம் சென்னையிலிருந்து  டாடா நகரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்லும் அதிவிரைவு ரயிலில் இன்று மதியம் சோதனை நடத்தினர்.

அப்போது பொது பெட்டியில் கேட்பாராற்று இருந்த பையை சோதனையிட்டதில் அதில் 9 பாக்கெட்டுகளில் தலா 2கிலோ விதம் 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

 இதனையடுத்து ரயில் அரக்கோணம் ரயில்வே நடைமேடை 6ல் வந்து நின்றது. பின்னர் அந்த ரயிலின் பொது பெட்டியிலிருந்த 18 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தியது யார் என விசாரனை நடத்திய வருகின்றனர்கள். பின்னர் கைப்பற்றப்பட்ட 18 கிலோ கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

Tags : ஒடும் ரயிலில்18 கிலோ கஞ்சா பறிமுதல்; ரயில்வே போலீசார் விசாரனை:

Share via