இதுதான் திராவிட மாடல் அரசு; கனிமொழி எம்பி பேச்சு

by Staff / 16-11-2023 02:32:53pm
இதுதான் திராவிட மாடல் அரசு; கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசும்போது இந்தியாவில் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் குஜராத்தில் தற்போது உப்பள தொழிலாளர்கள் உரிமை மறுக்கப்படும் சூழ்நிலை உள்ளது அங்கு உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் கிடையாது உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரியம் கிடையாது ஆனால் தமிழகத்தில் தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் உப்பள  தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உப்பள தொழிலாளர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது இதுதான் திராவிட மாடல் அரசு மேலும் உப்பள தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மகளிர் உரிமைத்தொகை என்பது அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் கிடையாது மகளிர் தங்களுடைய கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேறு யாரிடம் கையேந்தாமல் இருக்க வேண்டும் மகளிர் முன்னேற வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் தொகையாகும் என அவர் கூறினார்.
 

 

Tags :

Share via