30 குண்டுகள் முழங்க சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை

by Staff / 16-11-2023 02:43:07pm
30 குண்டுகள் முழங்க சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை

30 குண்டுகள் முழங்க சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சங்கரய்யா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடந்தது. இறுதிச் சடங்கு நிகழ்வில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, மதிமுக, விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பலர் அஞ்சலி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

Tags :

Share via

More stories