பெண்கள் விடுதியின் குளியலறையில் மொபைல் கேமரா
எர்ணாகுளம் மாடவனத்தில் உள்ள கேரள மீன்வளப் பல்கலைக்கழக (குஃபோஸ்) மகளிர் விடுதியின் குளியலறையில் மொபைல் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பனங்காடு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. பெண்கள் விடுதி கழிவறை வென்டிலேட்டரில் மொபைல் கேமராவை மாணவி ஒருவர் பார்த்து கூச்சலிட்டுள்ளார்.
அப்போது வெளியே நின்றவர் மொபைல் போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார். அங்கு ஓடிவந்த சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விடுதியில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை எனவும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
Tags :