காதலனுடன் மனைவி.. உயிரோடு எரித்த கணவன்

by Staff / 20-11-2023 11:37:34am
காதலனுடன் மனைவி.. உயிரோடு எரித்த கணவன்

உத்தரப்பிரதேசத்தின் பரேலி பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. ஷாஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோடியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி (35) மற்றும் நேபால் சிங் தம்பதி. இதில், மனைவி அஞ்சலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த நிலையில், வைக்கோல் அடுக்கி வைத்திருந்த பகுதியில் மனைவி கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கணவர் நேபால் சிங் வைக்கோலுக்கு தீ வைத்துள்ளார். இதில் அஞ்சலி தீயில் கருகி உயிரிழந்தார். காதலனின் நிலை தெரியவில்லை. நேபால் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via