எஸ்.எஸ். பத்ரிநாத் காலமானார்

by Staff / 21-11-2023 11:57:38am
எஸ்.எஸ். பத்ரிநாத் காலமானார்

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரான பிரபல கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத் (83) சென்னையில் இன்று காலமானார். 1978ம் ஆண்டு பத்ரிநாத் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது. பத்மபூஷன், பத்மஸ்ரீ, மருத்துவத்துறைக்கான பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பத்ரிநாத் பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனை சார்பில் பல்வேறு சேவைகளும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via