வருத்தம் தெரிவித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தனது பேச்சு மாற்றுத்திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து வருந்துகிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, நான் பயன்படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன். மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Tags :