மதுரை எய்ம்ஸ் வழக்கு: இன்று விசாரணை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை தொடங்கப்படவில்லை என்று தொடரப்பட்ட மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சமீபத்தில் மருத்துவர் உள்ளிட்ட சில பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது.
Tags :