செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

by Staff / 28-11-2023 01:08:10pm
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தனர். செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்னைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாமே எனக்கூறிய நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனுத்தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

 

Tags :

Share via