சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு: முதல்வர் பாராட்டு

by Staff / 29-11-2023 12:38:24pm
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு: முதல்வர் பாராட்டு

சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள செய்திக்குறிப்பில், உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்

 

Tags :

Share via