தமுமுக சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

by Staff / 06-12-2023 03:15:06pm
தமுமுக சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும் திருச்சி மரக்கடை முன்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தினை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் ஆர்எஸ எஸ் மற்றும் பாஜக அமைப்பினரின் கொள்கைகளை முறியடிப்போம் என முழக்கமிட்டனர். மேலும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து இந்துக்களுக்கான நாடு என்று கூறும் குரல்களுக்கு தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவிப்பதாக முழக்கமிட்டனர்.

 

Tags :

Share via