வதந்திகளை நம்பாதீர்கள் - நிதிஷ் குமார்
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நிதிஷ்குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியா கூட்டணியில் இருந்து நான் விலகவில்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.காய்ச்சல் காரணமாகவே என்னால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அடுத்த கூட்டம் எப்போது நடந்தாலும் நிச்சயமாகக் கலந்துகொள்வேன்" என்றார்.
Tags :