சாலை விபத்தில் தொழிலாளி பலி
திருமங்கலம் பேரையூர் அருகே மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம் 45 கூலித் தொழிலாளி மனைவி இறந்து விட்டதால் 3 மகள்களும் சொக்கநாதன் பட்டியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வருகின்றனர்.
தன்னுடைய மகன்களை பார்ப்பதற்காக சந்தானம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். குதிரைசாரி குளம் அருகே விருதுநகர் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் சந்தானம் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :