பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

by Admin / 30-07-2021 02:39:00pm
பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு



   
பாராளுமன்றத்தில் டெலிபோன் ஒட்டுகேட்பு பிரச்சினையை காங்கிரசார் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தை கடந்த 8 நாட்களாக எதிர்க்கட்சிகள் முடக்கி வந்த நிலையில் இன்றும் பாராளுமன்ற மக்களவையில் அமளி நடந்தது. ஆனாலும் பல சபை நடவடிக்கைகள் தொடர்ந்தன. 2 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இன்று கொரோனா தொடர்பாக விவாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
 
ஆனால் டெலிபோன் ஒட்டுகேட்பு பிரச்சினையை காங்கிரசார் எழுப்பி அமளியில் ஈடுபட்டார்கள். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் சபை கூடியது. அப்போதும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக இன்று முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

Tags :

Share via