வேளச்சேரி விபத்து : 2 பேர் கைது

by Staff / 08-12-2023 04:24:19pm
வேளச்சேரி விபத்து : 2 பேர் கைது

மிக்ஜாம் புயலின் போது, வேளச்சேரியில் கட்டுமான பணிய ஈடுபட்டிருந்த கட்டிடம் மண்ணிற்கு உள்ளே சென்றது. இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் உள்ளே சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தநிலையில், கட்டுமான பணிகளின் மேலாளர் எழில், மேற்பார்வையாளர் சந்தோஷ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் பிரிவில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via