புயல் நிவாரணமாக திருமாவளவன் ரூ.10 லட்சம் வழங்கினார்
மிக்ஜாம் புயலால் சென்னை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இந்தநிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிவாரணம் வழங்க அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் பலரும் தாமாக முன்வந்து நிவாரணம வழங்கி வருகின்றனர். மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விசிக தலைவர் திருமாவளவன் ரூ.10 லட்சம் வழங்கினார். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தையும் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
Tags :