வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 26 ஆயிரம் திருட்டு

by Staff / 01-11-2023 03:53:21pm
வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 26 ஆயிரம் திருட்டு

காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் ராஜகோபால் இவர் ஆன்லைன் நிறுவனத்தில் பதிவு செய்து ஒரு கம்பெனியின் டேப்லெட்டை வாங்கினார். வாங்கி பார்த்த போது அந்த டேப்லெட் வேலை செய்யவில்லை இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்தார். அப்பொழுது ஒரு செயலி மூலம் பதிவு செய்தால் அதற்கு நிவாரணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர் செயலி மூலம் பதிவு செய்த பொழுது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மூன்று தவணைகளாக ரூபாய் 25 ஆயிரத்து 966 படம் திருடப்பட்டது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via