மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

by Staff / 11-12-2023 03:42:24pm
மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அநாகரியமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மன்சூர் அலிகான் பேசியதற்காக த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும், பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள் என உயர் நீதிமன்றம் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via