25 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

by Staff / 11-12-2023 03:27:00pm
25 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க தூதரக ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தாக்குதல்கள் அதிகரிப்பது மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார். நாகை, காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்களை நேற்று முன்தினம் இலங்கை கடற்படை கைதுசெய்தது.

 

Tags :

Share via