வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி..

by Staff / 13-12-2023 12:39:17pm
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி..

22 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மறுபுறம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களும் நாடாளுமன்றம் அருகே மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via