3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் திறந்தபின்னர் அரையாண்டுத்தேர்வுகள்.

by Editor / 22-12-2023 09:45:49pm
3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் திறந்தபின்னர் அரையாண்டுத்தேர்வுகள்.

தமிழகத்தில் இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தேர்வுகள் இன்றுடன் முடிந்ததால் நாளை (டிச.23) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறை மொத்தம் 9 நாட்கள் விடப்பட்டுள்ளது.மேலும் தென்காசி,தூத்துக்குடி,திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் திறந்தபின்னர் தேர்வுகள் நடைபெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் திறந்தபின்னர் அரையாண்டுத்தேர்வுகள்.
 

Tags : 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் திறந்தபின்னர் அரையாண்டுத்தேர்வுகள்.

Share via