21 நாட்கள் உயிர் வாழ்ந்த குதிரை

by Staff / 01-03-2023 05:46:23pm
21 நாட்கள் உயிர் வாழ்ந்த குதிரை

துருக்கியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர், ஆனால் அதிலும் சிலர் உயிர் பிழைத்தனர். 21 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குதிரை ஒன்று தற்போது உயிர் பிழைத்தது. அதியமான் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு அடியில் குதிரை உயிருடன் இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்து காப்பாற்றினர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், 'இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது' என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via