நாகூர் தர்ஹாவில் சிறப்பு துவாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

by Staff / 23-12-2023 02:27:12pm
நாகூர் தர்ஹாவில் சிறப்பு துவாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

நாகூர் தர்ஹாவில் இன்று சந்தனக் கூடு விழா நடைபெறுவதையொட்டி, சிறப்பு துவாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த கந்தூரி விழாவின் முக்கிய திருவிழாவான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், பெரிய ஆண்டவர் சமாதியில் ஆளுநர் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார். தொடர்ந்துதர்ஹா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள் என குறிப்பிட்டார்.

 

Tags :

Share via