நெல்லை,தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் .
நெல்லை,தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் வெள்ள நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கனை இன்று (26.12.2023) முதல் வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்கள். அவர்கள் டோக்கன் வழங்க செல்லும் நேரங்களில் கடைகள் இயங்காது.
எனவே பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் டோக்கன் பெற ரேஷன் கடைகளுக்கு வர வேண்டாம்.
மேலும் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மட்டுமே தொகை வழங்கப்படும். தவறவிட்டவர்களுக்கு மட்டும் கடைசியாக தனி ஒரு நாளில் தொகை வழங்கப்படும்.நெரிசலின்றி பாதுகாப்பாக அனைவருக்கும் டோக்கன் மற்றும் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறதுஎன மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிக்கை.
Tags : நெல்லை,தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரண தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் .