ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்

by Staff / 29-02-2024 05:06:42pm
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் நடந்து சென்ற முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தீவிரமாக எடுத்து ஏர் இந்தியா மீது நடவடிக்கை எடுத்துள்ளது. விமான சேவையில் அலட்சியம் காட்டியதற்காக ஏர் இந்தியா நிறுவனம் மீது ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via