சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

by Staff / 17-12-2022 04:28:13pm
சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பேரையூரை சேர்ந்த பாண்டியின் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 24) என்பவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம். எஸ். சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு தனது ஊருக்கு வந்திருந்த முத்துகிருஷ்ணன் இன்று கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து அதிகாலை மூன்று மணிக்கு இருசக்கர வாகனத்தில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்திருமங்கலம் அருகே ஆலம்பட்டி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே வந்த போது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் தடுமாறி கீழே விழுந்த முத்துகிருஷ்ணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்லூரி மாணவரின் உடலை கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via