25 பேரை கடித்த நாய்

by Staff / 06-01-2024 02:55:24pm
25 பேரை கடித்த நாய்

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நாய் ஒன்று 25 பேரை கடித்துள்ளது. கொப்பல் மாவட்டம் அலவண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. 8 பேர் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு வயது சிறுமி உட்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் மூலம் நாயை பிடிக்க முயன்ற போது அது கொல்லப்பட்டது.

 

Tags :

Share via

More stories