ஆறுதலுக்காக சென்றேன். ஆய்வு செய்ய அல்ல என்பதை அப்பாவு புரிந்து கொள்ள வேண்டும், 

by Editor / 26-12-2023 10:27:04pm
ஆறுதலுக்காக சென்றேன். ஆய்வு செய்ய அல்ல என்பதை அப்பாவு புரிந்து கொள்ள வேண்டும், 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது அவர் தெரிவித்ததாவது-:எனது சொந்த ஊரான தூத்துக்குடி மக்கள் பிரதிபலித்த கருத்தை தான் சொன்னேன். .மக்களின் குரலாகத்தான் சொன்னேன்.. எனக்கு வாக்களித்த மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தான் சென்றேன். சேகர் பாபு சொன்னது போன்று தேர்தலில் போட்டியிட செல்லவில்லை., சபாநாயகர் அப்பாவுக்கூட கேட்டார். ஆய்வு செய்ய இவர் யார் என்று .நான் ஆய்வுக்காக போகவில்லை. எனது மக்களின் துன்பத்தில் பங்கெடுக்க சென்றேன். ஆறுதலுக்காக சென்றேன். ஆய்வு செய்ய அல்ல என்பதை அப்பாவு புரிந்து கொள்ள வேண்டும், 

அரசை குற்றம் சொல்ல வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஆனால், தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பதை பதிவு செய்தேன்.. நான் மக்களின் செய்தி தொடர்பாள. நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போட வேண்டும் என்பதற்காக போகவில்லை.. எனது திறமையை பார்த்து பணியை கொடுப்பது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமீத்ஷாவின் கடமையும் ஆகும்..

தத்தளித்த சகோதர, சகோதரிகளை பார்த்து  ஆறுதலாக கூறிய வார்த்தைகளை கொச்சைப்படுத்த வேண்டாம்.. மத்திய அரசு குழு பாராட்டு தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு அது சும்மா என்று முடித்துக்கொண்டார்..


 

 

Tags : ஆறுதலுக்காக சென்றேன் ஆய்வு செய்ய அல்ல என்பதை அப்பாவு புரிந்து கொள்ள வேண்டும், 

Share via