அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை  மேற்கொள்ள வேண்டும்- அன்புமணி இராமதாஸ்

by Admin / 27-12-2023 06:12:55pm
 அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை  மேற்கொள்ள வேண்டும்- அன்புமணி இராமதாஸ்

எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு; அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை  மேற்கொள்ள வேண்டும் என பா..ம..க. தலைவர்  அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

“தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த  பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும்.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து  கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.  

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை  என்பதையே  இந்த நிகழ்வு காட்டுகிறது.”

 

 

 

Tags :

Share via