குற்றாலம் மெயினருவியில் பெண்கள் குளிக்க தடை.

by Editor / 25-07-2023 09:57:38am
குற்றாலம் மெயினருவியில் பெண்கள் குளிக்க தடை.

தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமான குற்றால அருவிகள் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளது. குற்றால அருவிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் சீசன் தற்போது களைகட்ட தொடங்கி உள்ளது.

மாவட்டத்தில் பெய்து மழை காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் வார விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, வார நாட்களிலும் குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் தென்காசியில் கடந்த இரண்டு தினங்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால்  மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது. மேலும் அபாய வளைவைத் தாண்டியும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் ஆண்கள் பகுதியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெண்கள் பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

 

Tags :

Share via