பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது 

by Editor / 28-12-2023 03:47:28pm
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய  வி.ஏ.ஓ கைது 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போத்தம்பட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி..ஏ..ஓ ரம்யா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் உசிலம்பட்டி அய்யம்பாளையத்தை சேர்ந்த முத்துப் பேயத்  தேவர் இவருக்கு சொந்தமான 34 சென்ற இடத்தை அவருடைய மகன் காசி மாயன் பெயருக்கு மாற்றுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார் இந்நிலையில் கடந்த வாரம் அவர் கிராம நிர்வாக அலுவலர் ரம்யாவை நேரில் சென்று சந்தித்து உள்ளார் அப்பொழுது வி.ஏ.ஓ ரம்யா பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ரூபாய் ஒன்பதாயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.. இது குறித்து முத்து பேயத்தேவர் மதுரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறை  துணை கண்காணிப்பாளர் சத்திய சீலன் அறிவுரைத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் 9000 த்தை அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர் .அதனை கிராம நிர்வாக அலுவலர் ரம்யாவிடம் அவருடைய அலுவலகத்தில் வைத்து கொடுத்த பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆய்வாளர் அன்பு ஜெயராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது 

Share via