அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு..

by Editor / 02-01-2024 09:06:16am
அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு..

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. புத்தாண்டு பிறந்து இந்த ஆண்டின் முதல் பள்ளி நாள் என்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு தயாராகி வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் பொங்கல் பண்டிகை வருவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படவுள்ளது.

 

Tags : பள்ளிகள் இன்று திறப்பு..

Share via