பள்ளி மாணவி கர்ப்பம், கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
சேலம், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்1 மாணவி கடந்த 1ம்தேதி வயிறு வலிப்பதாக தாயிடம் கூறினார்.உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் தாய் கடும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விசாரித்த போது, ஓமலூர் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் மோகன்ராஜ் இதற்கு காரணம் என்பதும்.வீட்டில் தனியாக இருந்தபோது அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இது குறித்து வெளியே சொன்னால் தாயையும், அண்ணனையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக போலீசாரிடம் பள்ளி மனைவி கூறினார்.இதுகுறித்து சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி மாணவன் மோகன்ராஜ் மீது போக்சோ வழக்குப்திவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :