குளோரின் வாயு கசிவால் மக்கள் அவதி

by Staff / 09-01-2024 12:50:34pm
குளோரின் வாயு கசிவால் மக்கள் அவதி

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள ஜான்ஜ்ரா பகுதியில் உள்ள காலி இடத்தில் குளோரின் எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலிண்டர்கள் திடீரென கசிந்ததால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக வந்து களத்தில் இறங்கினர். அப்பகுதி மக்கள் இன்று அதிகாலை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via