பொங்கல் பண்டிகை: விமான டிக்கெட் கண்டணம் உயர்வு

by Staff / 13-01-2024 12:14:07pm
பொங்கல் பண்டிகை: விமான டிக்கெட் கண்டணம் உயர்வு

பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மதுரைக்கு வழக்கமாக ரூ.3,367 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது. சென்னை - கோவைக்கு வழக்கமாக ரூ.3,315 என இருந்த நிலையில் தற்போது ரூ.14,689 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via