கொலை வெறி தாக்குதல் நடத்திய பா.ஜ.கவினரை உடனடியாக கைது செய்க -நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்

by Admin / 14-01-2024 11:50:27pm
 கொலை வெறி தாக்குதல் நடத்திய பா.ஜ.கவினரை உடனடியாக கைது செய்க -நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கு இனிய தம்பிகள் ஆசிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று பதிமூணு ஒன்று 2024 இரவு நீலிகோணம் பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டச்சென்ற போது அப்பகுதியைச் சார்ந்த பா..ஜக நகர சிலர் தம்பிகளில் இருவர் மீதும் கொலவெறி தாக்குதல் நடத்தியுள்ள செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. ஜாதி, மதங்களை கடந்து தமிழின தலைமுறை பிள்ளைகள் தமிழர்களாக ஒன்றுபட்டு பெருமளவில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.கவினர் கோழைத்தனமான கொலை வெறி தாக்குதலுக்கு காரணமாகும். தமிழர் ஓர்மையை சீர்குலைத்து மத கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபமடைய துடிக்கும் பா.ஜ.கவின் இழிவான செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பா.ஜ.க ,ஆர். எஸ். எஸ். உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறை செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க எவுத நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது .இதுதான், தமிழ்நாட்டின் பா.ஜ.க வரவிடாமல் தடுக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா... உண்மையில், இந்துத்துவ அமைப்புகளுக்கு தி.மு.க அரசு தரும் மறைமுக ஆதரவு. மாற்றுக் கட்சியினரை தாக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர முக்கிய காரணமாகும் .ஆகவே, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பிகள் ஆசிக் மற்றும் பாலாஜி இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்திய பா.ஜ.கவினரை உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

 

Tags :

Share via