பீஹாரில் சுகாதார ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் போனஸ்: நிதிஷ்குமார்

by Editor / 19-04-2021 04:26:27pm
பீஹாரில் சுகாதார ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் போனஸ்: நிதிஷ்குமார்

பீஹாரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பீஹார் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பீஹாரில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.மேலும், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்பது தான். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஊரடங்கின் போதும் பீஹாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பீஹாரில் சுகாதார ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் போனஸ்: நிதிஷ்குமார்

பீஹாரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பீஹார் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பீஹாரில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.மேலும், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்பது தான். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஊரடங்கின் போதும் பீஹாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via