ரயில் கழிவறையில் இறந்து கிடந்த பெண்

by Staff / 17-01-2024 01:45:24pm
ரயில் கழிவறையில் இறந்து கிடந்த பெண்

தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறையில் வைக்கம் அரட்டுகுளங்கராவைச் சேர்ந்த சுரேந்த்திரன் நாயரின் மகள் சூரஜா எஸ்.நாயர் (45) இறந்து கிடந்தார். இவர் நேற்று காலை ஒடிசாவில் உள்ள தனது சகோதரி சுதா வீட்டிற்கு சென்றுவிட்டு தனியாக வீடு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சக பயணிகளிடம் உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறையில் வைக்கம் அரட்டுகுளங்கராவைச் சேர்ந்த சுரேந்த்திரன் நாயரின் மகள் சூரஜா எஸ்.நாயர் (45) இறந்து கிடந்தார். இவர் நேற்று காலை ஒடிசாவில் உள்ள தனது சகோதரி சுதா வீட்டிற்கு சென்றுவிட்டு தனியாக வீடு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சக பயணிகளிடம் உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த சக பயணிகள் பயணிகள் கழிவறைக்கு சென்று பார்த்துள்ளனர். ரயிலில் கழிவறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. தமிழகத்தின் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்ததும், ரயில்வே போலீசார் மற்றும் பயணிகள் கதவை திறந்து பார்த்தபோது, ​​சூரஜா பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via