இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சருக்கு வீரவாள் பரிசு

by Staff / 22-01-2024 03:37:46pm
இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சருக்கு வீரவாள் பரிசு

சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் தி. மு. க. இளைஞரணி மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வீரவாள், கேடயம் நினைவு பரிசை அமைச்சர் கே. என். நேரு, வழங்கினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எம். பி. க்கள் டி. ஆர். பாலு, ஆ. ராசா மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via