பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவு நீர்

by Admin / 24-01-2024 01:30:49pm
பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவு நீர்

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவு நீரை நேரடியாக வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாயில் கலக்க விடுவதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டிலேயே 15 மாவட்டங்களில் மட்டுமே இப் பூச்சி கொல்லி மருந்து பரிசோதனை நிலைம் செயல்பட்டு வருகிறது.

 தென் மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  வேலாயுதபுரம் பரிசோதனை நிலையம் உட்பட 3 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. 

மேலும் இப்பரிசோதனை நிலையத்தில் விருதுநகர், தென்காசி, ராமநாதபும், கன்யாகுமரி மாவட்டம், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிசோதனை ஆராய்ச்சிக்காக கொண்டு வருகின்றனர்.

 இங்கு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கெமிக்கல்களை நேரடியாக நீரோடை வழியாக அருகில் உள்ள நெடுங்குளம் கண்மாயில் கலக்க விடுவதால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

மேலும் வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாயில் தேக்கி வைக்கும் நீரைக் கொண்டு ஆவல் நத்தம், இலுப்பையூரணி, மூப்பன்பட்டி, தோட்டிலோவன்பட்டி, கஞ்சம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே கண்மாயை அமலைச் செடிகள் ஆக்கிரமித்து உள்ளதை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 

இப் பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை நிலைய கெமிக்கல் மருந்துகளும் தற்போது கலந்து வருவதால் அவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

மேலும் இது குறித்து வேளாண்மை அலுவலர் கீதாவிடம் அப்பகுதி விவசாயிகள் பலமுறை முறையிட்டும் அதற்கான எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.  

இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு நேரில் ஆய்வு செய்து மெத்தனப்போக்காக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவு நீர்
 

Tags :

Share via