நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை
நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15ஆம் தேதி அனுமதி சீட்டுடன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். பருத்திதுறை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்நிலையில் 10 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :