அமலாக்கத்துறை அலுவலகத்தில் லாலு பிரசாத் யாதவ்

by Staff / 29-01-2024 12:23:26pm
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லாலு பிரசாத் யாதவ்

நிலம் ஒதுக்கீடு வழக்கில் விசாரணை நடத்துவதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் திங்கள்கிழமை பாட்னாவில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். மத்திய ஏஜென்சி அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான ஆர்ஜேடி தொண்டர்கள் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் சேர்ந்து புதிய அரசை உருவாக்கியுள்ள நிலையில், ஆர்ஜேடி கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர்.

 

Tags :

Share via