புத்தாண்டு முதல் அமுலுக்கு வருகிறது.. வட்டி விகித உயர்வு.

by Editor / 31-12-2022 10:56:59pm
புத்தாண்டு முதல் அமுலுக்கு வருகிறது.. வட்டி விகித உயர்வு.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி மூத்த குடிமக்கள் திட்டத்தில் இனி 8% வட்டி, தேசிய சேமிப்பு பத்திரத்தில் 7% வட்டி, அஞ்சலங்களில் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் திட்டங்கள் வட்டி 1 புள்ளி, 1% வரை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via