பயிற்சியை நிறைவு செய்த 41 டிஎஸ்பிக்கள் பணி நியமனம்-டிஜிபி உத்தரவு

by Editor / 26-07-2022 11:25:29am
பயிற்சியை நிறைவு செய்த 41 டிஎஸ்பிக்கள் பணி நியமனம்-டிஜிபி உத்தரவு

 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று டி.எஸ்.பி.க்களாக தேர்ச்சிபெற்றிருந்த 81 பேர் பயிற்சியை கடந்த மாதம் நிறைவு செய்தனர். இவர்கள் தமிழ்நாடு காவல்துறையில் நேரடியாக டி.எஸ்.பி.க்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதற்கட்டமாக 41 பேர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும், நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் டி.எஸ்.பி.க்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டார்.

பணி வழங்கப்பட்டவர்களுக்கு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர கமிஷனர் அலுவலகங்களைத் தவிர பிற மாநகர மற்றும் மாவட்டங்களில் உதவி கமிஷனர்களாகவும், டி.எஸ்.பி.க்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : Appointment of 41 DSPs who completed training-DGP order

Share via