ரயிலில் அடிபட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

by Staff / 29-01-2024 01:37:02pm
ரயிலில் அடிபட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி என்பவர் மகன் பெரிய வீரன்(21). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் பெரிய வீரன் குறிஞ்சாங்குளம் அருகே ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். நேற்று ஜனவரி 28 இதைக் கண்ட அவ்வழியாகச் சென்ற அப்பகுதி பொதுமக்கள் விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via