வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

by Staff / 31-01-2024 04:21:56pm
வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த சென்னை - நாகர்கோவில்     வந்தே பாரத்  சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஜனவரி மாதத்தில் வியாழக்கிழமைகளில் சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை  - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 1 முதல் மார்ச் 28 வரை  வியாழக்கிழமைகளில் காலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) குறிப்பிடப்பட்ட அதே வியாழக்கிழமைகளில் மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த  சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 05.55  மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் மதுரைக்கு காலை 10.56 மணிக்கு வந்து சேருகிறது. இந்த சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில் களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via