காதலியை கல்லால் அடித்துக்கொன்றவருக்கு சிறை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் கடந்த 2016ஆம் ஆண்டு சிதைந்த நிலையில் பெண் சடலம் இருப்பதாக காவலாளி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ரிஹானாபர்வீன்(27) என்பது தெரியவந்தது. மேலும் இவரும் களத்துமேடு பகுதியை சேர்ந்த விஜி (34) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரிஹானாபர்வீனை செஞ்சி கோட்டைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பெரிய கல்லால் அவரது தலையில் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட விஜியின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Tags :