குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் பெட்ரோல்குண்டு வீசிய தந்தை

by Staff / 03-02-2024 02:17:59pm
குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் பெட்ரோல்குண்டு வீசிய தந்தை


செங்குன்றம் அருகே மது குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில், மகன் வீட்டின்மீது தந்தை பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் குருசாமி (60). மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன் தினேஷ் (30) மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, தனித்தனியே வசிக்கின்றனர். மகன் தினேஷ் லாரி மெக்கானிக். குருசாமியின் மனைவி இறந்து போனதால், மகன் மற்றும் மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். தந்தை குருசாமி மற்றும் மகன் தினேஷுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் இருந்த தனது மகன் தினேஷிடம் மது குடிப்பதற்கு தந்தை குருசாமி பணம் கேட்டுள்ளார். பணம் தர தினேஷ் மறுத்துள்ளார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே வாய்த்தகராறு முற்றியது. பின்னர் வெளியே சென்ற குருசாமி, நேற்றிரவு மதுபோதையில் மகன் வீட்டுக்கு திரும்பினார். அவரது கையில் பெட்ரோல் குண்டுகள் இருந்தன. பின்னர் தனது மகனை வெளியே அழைத்த குருசாமி, எனக்கு மது குடிக்க பணம் தரமாட்டேன் என்று சொன்னியே… இப்போ பார், உன் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசுகிறேன் என்று கூறியபடி, மகனின் வீட்டின்மீது ஒரு பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via