பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவை புதுப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்ற வாரம் இலங்கை கடற்படையால் மேலும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :