சுதந்திர தினத்தில் ஒலிம்பிக் வீரர்களை செங்கோட்டைக்கு அழைத்து உரையாட பிரதமர் முடிவு

by Admin / 03-08-2021 05:55:01pm
சுதந்திர தினத்தில் ஒலிம்பிக் வீரர்களை செங்கோட்டைக்கு அழைத்து உரையாட பிரதமர் முடிவு



புதுடில்லி: ஒலிம்பிக் போட்டியாளர்கள் அனைவரையும் வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க பல பிரிவுகளின் கீழ் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். தற்போது வரை இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் (பளுதூக்குதல்) மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் (பாட்மின்டன்) மட்டுமே கிடைத்துள்ளது.

 ஆண்கள் ஹாக்கியில் அரையிறுதியில் தோல்வியுற்ற இந்திய அணி, வெண்கலத்திற்கான போட்டியில் பங்கேற்க உள்ளது. பெண்கள் ஹாக்கியில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. மேலும், இனிவரும் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்று வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது

.வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு, இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து போட்டியாளர்களையும் வருகிற 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விட இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via